பண்பாட்டுப் பவனியுடன் ஆரம்பமான மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கிய கூடலின் மூன்று நாள் கண்ணகி கலை இலக்கிய விழா இன்றுடன் நிறைவுபெறுகின்றது. முடியுடை மூவேந்தர் ஆண்ட நாடுகளுடன் தொடர்புபட்டவள் கண்ணகி. சோழநாட்டிலே பிறந்து, பாண்டி நாட்டிலே வளர்ந்து சேர நாட்டிலே தெய்வீகமானாள். அவருடைய தெய்வீக த்தை அறிந்து சேரநாட்டு மன்னன் செங்குட்டுவன் அவளுக்கு விழா எடுத்தான். இவனுடைய காலத்தே இலங்கையை ஆண்டவன் கஜபாகு ஆவான். இருவரும் நட்பு பூண்டிருந்ததால் கஜபாகு தனது நாட்டிலும் கண்ணகி விழாவை ஆரம்பித்தான். ஈழத்தின் பல பகுதிகளிலும் மறைந்துபோன இவ்விழா கிழக்கில் மட்டும் நிலை பெற்றுநிற்கிறது. இங்குள்ள அநே கமான கிராமங்களில் உள்ள கண் ணகி அம்மன் ஆலயங்கள் இத ற்கு சான்று பகர்கின்றன.
கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் கண்ணகி கலை இல க்கிய 'கூடல்' என்னும் பெயரில் ஓர் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அதன் தலை வராக கவிஞர் த.கோபாலகிருஷ் ணன் தெரிவு செய்யப்பட்டார். இன்று டன் நான்கு விழாக்களை வெற்றி கரமாக நடத்தியுள்ளனர் கூடல் அமைப்பினர். இந்த அமைப்பு பற்றி வீரகேசரி வார வெளியீட்டின் சார்பாக ஒரு நேர்காணல் இடம்பெற்றது. அதன்போதே அவர் கண்ணகி வழிபாடு பண்பா ட்டு அடையாளம் என்று குறிப்பிட்டார்.
அவருடனான நேர்காணலின் விபரம் வருமாறு:
கேள்வி: இவ்வாறான ஓர் அமைப்பின் அவசியம் ஏன் உணரப்பட்டது?
பதில்: இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வள ர்ச்சி. உலகமயமாகும் நுகர்வு. நாகரிகத்தின் நவீன வளர்ச்சி. ஆட ம்பர மோகம். இவற்றினால் நமது பாரம்பரிய பண்பாட்டு கலை வடிவங்கள் மறைந்துகொண்டு செல்கின்றன. நல்ல நெறிகள் நெஞ்சை விட்டு நீங்கி தீய நெறிகள் குடிபுகுந்துவிட்டன. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. நவீன கலை வடிவங்களால் தீய நெறியில் நிற்கும் மக்களை மீட்கமுடியாது. பாரம்பரிய கலை வடிவங்களால் மட்டுமே அது முடியும். கண்ணகி வழிபாடு கிழக்கின் பண்பாட்டு அடையாளமாகும். எனவே இதனை முன்னெடுத்தால் மக்கள் மத்தியில் இலகுவாக செல்லும். அதன்மூலம் மக்களை இலகுவாக நல்வழியில் இட்டுச் செல்லலாம். இந்த விடயத்தில் பேராசிரியர் மெளனகுரு உட்பட பலர் ஆர்வம் கொண்டிருந்தனர். அத்தகையோரின் கூட்டு முயற்சியே கூடல்.
கேள்வி : உங்கள் எதிர்பார்ப்பு கண்ணகி கலை இலக்கிய விழா மூலம் நிறைவேறுகின்றதா?
பதில் : ஆம். மக்கள் மத்தியில் ஏற்பட்டு ள்ள ஆர்வமும் பண்பாட்டு தளத்தில் அவர்களை ஒன்றிணைக்க முடிந்துள்ளவையும் அதன் வெற்றியாகும். நமது மக்களை அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தி ஆக்கபூர்வமான வழியில் இட்டுச் செல்வது எமது நோக்கு. இதற்கு முதலில் தேவைப்படுவது ஒற்றுமை. சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும். இதுவரை அதனைச் செய்துள்ளோம். அந்த மனநிறைவுடன் இனிமேல் அடுத்த பணிகளுக்கு செல்வோம்.
கேள்வி: இப்பாரிய பணிக்கான நிதி மற் றும் ஆளணி வசதிகளுக்கு உறுதியான அடித்தளம் இடப்பட்டுள்ளதா?
பதில்: உறுதியான அடித்தளம் என்பத ற்கு இல்லை. விழாவுக்காக வருடாந்தம் பேராளர்களைத் திரட்டுகின்றோம். இவர்க ளின் மூலமும் பொதுமக்களிடம் இருந்தும் நிதி திரட்டப்படுகின்றது. பிரதேசவாரியாக விழா முன்னெடுக்கப்படுவதால் அங்குள்ள மாணவர்கள் இளைஞர்கள், பெரியவர்கள் ஒத்துழைப்பு நல்கின்றனர். எதிர்காலத்தில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளிடம் ஆதரவு பெறவுள்ளோம். இதன்மூலம் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந் தவர் காசுகள் தாரீர். ஆண்மையாளர் உழை ப்பினை நல்கீர். அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர். இவையே எமது வேண்டு கோள். இதுவரை அன்பும் அரவணைப்பும் ஆதரவும் கிடைத்துள்ள பூரிப்பு எமக்கு.
கேள்வி: வருடாந்தம் ஒரு விழாவை நடத்துவது மட்டும் உங்கள் நோக்கமா? வேறு திட்டங்கள் உண்டா?
பதில்: மக்களை ஒன்றுபடுத்துவது முதல் நோக்கம். அதனை இதுவரை செய்துள் ளோம். அடுத்து சகல பாரம்பரிய கலைகளிலும் கவனம் செலுத்தப்படும். பின்னர் அவற்றை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டப்ப டும். கல்வி வசதியற்ற ஏழை மாணவர்களு க்கு கல்வி அறிவை ஊட்டவும், விதவைகளுக்கு சுயதொழில் உதவிகளை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை கிராமப்புறங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
கேள்வி: விழாவில் இடம்பெறும் விடயங்கள் குறிப்பாக ஆய்வுக்கட்டுரைகள் ஆவணப்படுத்தப்படுகின்றனவா?
பதில் : ஏன் இல்லை. நிகழ்வுகள் யாவும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இவை அடுத்த விழாவின்போது காண்பிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன. அத்துடன் 'பரல்' என்னும் பெயரில் ஒவ்வொரு வருட மும் விழாவின்போது சிறப்பு மலரும் வெளியிடப்படுகின்றது. இம்மலரில் ஆய் வுக்கட்டுரைகள் யாவும் இடம்பெறுகின் றன. இந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொகு த்து நூலாக வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
கேள்வி: கண்ணகி வழிபாடு கிழக்கில் மட்டுமே நிலைபெற்றுள்ளது. கிழக்கின் பூர்வீக குடியினர் சேர நாட்டினர் என்பது இத ற்கு காரணமா?
பதில்: இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டதுபோல இங்கு வாழும் மக்கள் சேரநாட்டு வழிவந்தவர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் கிழக்கு கண்ணகி வழிபாட்டுக்கு உகந்த இடமாக காணப்பட்டது. கண்ணகி உழைக்கும் மக்களின் தெய்வமாக மதிக்கப்பட்டாள். கிழ க்கில் உள்ள மக்கள் விவசாயத்தை மேற்கொண்டனர். எனவே இங்கும் உழைக்கும் மக்கள் வாழ்ந்த காரணத்தினால் உழைக்கும் மக்களின் தெய்வமான கண்ணகி வழிபாடு நிலை பெற்றிருக்கலாம். ஆகம முறைக்கு உட்படாத வழிபாட்டுக்கு கிழக்கில் எதிர்ப்பு இருக்கவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கேள்வி: கொம்பு விளையாட்டு கிழக் கில் ஒரு முக்கிய பாரம்பரிய கலை வடிவம். கண்ணகியுடனும் தொடர்புபட்டது. இந்திர விழா போன்று இங்குள்ள பல கிராமங்களில் எமது சிறு வயதில் நடத்தப்பட்டது கடந்த சுமார் அரை நூற்றாண்டாக அது கைவிடப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஓரிரு கிராமங்களில் ஓரிரு தடவைகள் மிகச்சிறிய அளவில் நடத்தப்பட்டது. இவ்வருட தொடக்க விழாவின் போது கொம்பு விளையாட்டு நடத்தி காட்டப்பட்டது. இதனை கிழக்கு மக்கள் யாவரும் கண்டு களிக்க வாய்ப்பு இல்லை. அதனை பயின்று பின் சந்ததிக்கு கொண்டு செல்லவும் முடியாது. எனவே இந்த விளையாட்டை முன்னர் போல விமரிசையாக கிராமம் தோறும் நட த்த நீங்கள் கரிசனை காட்ட முடியாதா? இதனூடாக கிராம மட்டத்தில் அதிக மக்களை ஒன்று திரட்டவும் பண்பாட்டு விழுமியங்களை நீங்கள் எதிர்பார்ப்பது போல் முன்னெடுக்கவும் முடியுமல்லவா?
பதில்: இது ஒரு சிறந்த ஆலோசனை. அடுத்து வரும் வருடங்களில் நாம் நிச்சயமாக இதில் கவனம் செலுத்துவோம்.
கேள்வி: பிரதேச மட்டத்தில் ஏன் விழா நடத்தப்படுகிறது? 2ஆவது விழா புதுகுடியிருப்பிலும் 3ஆவது விழா அக்கரைப்பற் றிலும் நடத்தப்பட்டன. இவ்விரு கிராமத்து க்கும் இடையில் கண்ணகி கோயில் கொண்டுள்ள சில முக்கிய பிரதேசங்கள் இருக்கின்றன. அங்கு விழா நடத்தப்படவில்லையே?
பதில்: பரவலாக நடத்தப்படுவது சிறப்பு. கண்ணகி விழா முழு தமிழ் சமூகத்தையும் ஒட்டியது. எனவே பிரதேச ரீதியாக எல்லா மக்களையும் சென்றடையும். மேலும் சில முக்கிய கிராமங்கள் இருப்பது உண்மை தான். ஆனால், புதுகுடியிருப்பு ஆலையடி வேம்பு, திருக்கோவில், தம்பினுவில் மக்கள் முன்வந்தது போல ஏனைய கிராமத்தவர் முன்வரவில்லையே.
இவ்வாறு இச்செவ்வியிலே செங்கதிரோன் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். கண்ணகி கலை இலக்கிய விழாவில் ஒரு முக்கிய அம்சத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டும். கண்ணகி வரலாற்றில் கண்ணகி, கோவலன், மாதவி, சாத்தனார், கவுந்தியடி கள், இளங்கோவடிகள் ஆகிய ஆறு முக் கிய பாத்திரங்கள் உள்ளன. கண்ணகி கலை இலக்கிய விழா மூன்று நாட்களுக்கு ஆறு அமர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 அமர்வுகளும் மேற்படி 6 பேரின் பெயரிடப்பட்ட அரங்குகளிலேயே நடத்தப் படுகின்றன. இவர்களின் சிறப்பு திறமைக்கு ஏற்பவே அவர்களின் பெயரிலான அரங்கில் நிகழ்வுகள் இடம்பெறுவது மிக விசேட அம்சமாகும். மாதவி நடனம் எனவே மாதவி அரங்கில் நிறைவு நாள் கலை அமர்வும் இளங்கோவடிகள் காப்பிய கர்த்தா எனவே இளங்கோவடிகள் அரங்கில் ஆய்வு அமர்வும் நடத்தப்படுகின்றன.
(நேர்காணல்: மண்டூர் நிருபர்)
நன்றி : வீரகேசரி
நன்றி : வீரகேசரி