க.ருத்திரன்
 
கண்ணகி கலை இலக்கியக் கூடல் நிகழ்வானது எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கண்ணகி கலை இலக்கிய விழாவின் முதலாம் நாள் 15ஆம் திகதி மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ள இயலரங்கில் சிறப்பம்சமாக 'சிலப்பதிகாரம் உணர்த்தும் வாழ்க்கைத் துணைநலம்' எனும் தலைப்பில் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் என்பவரது ஒருமணிநேர சொற்பொழிவொன்று இடம்பெறவுள்ளது என்று கண்ணகி கலை இலக்கியக் கூடலின் செயலாளர் அன்பழகன் குரூஸ் தெரிவித்தார். 
 
இயற்தமிழின் சுவைநுகர அனைவரையும் அரங்கிற்கு வருகை தருமாறு கண்ணகி கலை இலக்கியக் கூடல் அழைக்கின்றது என்று இலக்கிய ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.